search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சேலம் புதிய பஸ் நிலையம்"

    சேலம் புதிய பஸ் நிலையம் அருகே தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்களை விற்பனை செய்த கடை உரிமையாளருக்கு 1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. #PlasticBan
    சேலம்:

    தமிழகம் முழுவதும் கடந்த ஜனவரி மாதம் 1-ந் தேதி முதல் பிளாஸ்டிக் கவர், கப்புகள் போன்றவற்றுக்கு தடை விதிக்கப்பட்டது.

    இதையடுத்து சேலம் மாவட்டத்தில் பிளாஸ்டிக் கவர்கள் விற்பனை செய்வதை தடுக்க பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப் பட்டதோடு, துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டது.

    இதையடுத்து சேலத்தில் உள்ள ஓட்டல்கள், மளிகை கடைகள், மருந்து கடைகள், கறிக்கடைகளில் பிளாஸ்டிக் கவர்கள், கப்புகள் போன்றவற்றை தவிர்த்து வந்தனர். அதற்கு பதிலாக துணிப்பைகள் வழங்கி வந்தனர்.

    இந்த நிலையில் சில கடைகளில் ரகசியமாக பிளாஸ்டிக் கவர்கள் விற்கப்படுவதாக மாநகராட்சி நகர்நல அலுவலர் பார்த்திபனுக்கு தகவல் வந்தது.

    இதையடுத்து இன்று காலை புதிய பஸ் நிலையத்தில் உள்ள பழக்கடைகளில் திடீர் ஆய்வு நடத்தினார். அப்போது அவர்கள் பிளாஸ்டிக் கவர்களை பயன்படுத்தியது தெரியவந்தது. இதுகுறித்து அவர்களிடம் இந்த கவர்களை எங்கிருந்து வாங்கினீர்கள் என்று கேட்டார்.

    அதற்கு அவர்கள் ஆலமரத்துகாடு பகுதியில் உள்ள ஒரு கடையில் வாங்கினோம் என்று கூறினார்கள். உடனே நகர்நல அதிகாரி பார்த்திபன், சுகாதார அதிகாரி ரவிச்சந்திரன், ஆய்வாளர் ஆகியோர் வீரபாண்டி நகரில் உள்ள கடைகளில் சோதனை நடத்தினார்கள்.

    அப்போது ஆலமரத்து காட்டில் உள்ள ஒரு கடையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்கள் கட்டுக்காட்டாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த பிளாஸ்டிக் கவர்கள் அனைத்தையும் பறிமுதல் செய்தனர். 200 கிலோ மதிப்புள்ள இவற்றின் மதிப்பு ரூ. 2 லட்சம் ஆகும்.

    இதையடுத்து தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்களை விற்பனை செய்த கடை உரிமையாளருக்கு 1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தனர். #PlasticBan
    சேலம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து கோவை, மதுரைக்கு மீண்டும் நேற்று முதல் பஸ்கள் இயக்கப்பட்டன.
    சேலம்:

    சேலம் புதிய பஸ்நிலையத்தில் 2 பிரிவுகளாக கான்கிரீட் தரைதளத்தை புதுப்பிக்க மாநகராட்சி நிர்வாகம் ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்தது. இதற்காக மண்பரிசோதனை நடைபெற்றபோது மண் ஈரப்பதம் இருந்ததால், மீண்டும் தார்சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டது. பின்னர் முதற்கட்டமாக புதிய பஸ்நிலையத்தின் முதல் பிரிவில் தரைத்தளம் அமைக்கும் பணி தொடங்கியது.

    இதையடுத்து அங்கிருந்து கடலூர், சென்னை, சிதம்பரம், திருவண்ணாமலை உள்பட பல்வேறு இடங்களுக்கு இயக்கப்பட்ட பஸ்கள் தற்காலிகமாக பழைய பஸ் நிலையம் அருகே உள்ள போஸ் மைதானத்தில் இருந்து இயக்கப்பட்டன. அதே நேரத்தில் புதிய பஸ் நிலையத்தில் இருந்து கோவை, மதுரை, நெல்லை போன்ற ஊர்களுக்கு 2-வது பிரிவில் இருந்து பஸ்கள் சென்று வந்தன. இந்தநிலையில் புதிய பஸ் நிலையத்தில் முதல் பிரிவில் பணிகள் முடிந்து மீண்டும் கடலூர், சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு மீண்டும் பஸ்கள் அங்கிருந்து இயக்கப்பட்டன.

    இதைத்தொடர்ந்து கடந்த மே மாதம் 2-வது பிரிவில் தரைத்தளம் அமைக்கும் பணி தொடங்கியது. இதனால் அங்கிருந்து இயக்கப்பட்ட மதுரை, கோவை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு செல்லும் பஸ்கள் தற்காலிகமாக ஜவகர் மில் திடலில் இருந்து புறப்பட்டு சென்றன. இந்த பணிகள் முடிவு பெற்றதால் நேற்று முதல் 2-வது பிரிவில் இருந்து மீண்டும் பஸ்கள் இயக்கப்பப்பட்டன. அதாவது மதுரை, நெல்லை, கோவை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு வழக்கம் போல பஸ்கள் புறப்பட்டு சென்றன. இதனால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    சேலம் புதிய பஸ் நிலையத்தில் மீண்டும் அனைத்து பகுதிகளுக்கும் முன்பு இருந்தது போலவே பஸ்கள் புறப்பட்டு செல்வதால், பயணிகளின் கூட்டம் அதிகமாக உள்ளது. போக்குவரத்து நெரிசல் இன்றி பஸ்களை இயக்க வசதியாக ஒவ்வொரு பஸ்களும் புறப்படும் 20 நிமிடத்துக்கு முன்பு பஸ் நிலையத்துக்கு கொண்டு வர வேண்டும். கார், இருசக்கர வாகனங்களை பஸ் நிலையத்துக்குள் கொண்டு வரக் கூடாது என போலீசார் அறிவுரை வழங்கி உள்ளனர். 
    ×